search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாட்டியை கொன்ற பேரன்"

    அறிவுரை கூறியதால் ஆத்திரமடைந்த வாலிபர் தனது பாட்டியை விறகு கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள சிங்காரக்கோட்டை எஸ்.குரும்பபட்டியைச் சேர்ந்தவர் காளையன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 75). இவர்களது மகன் சந்திரசேகரன். விவசாய தோட்டம் வைத்து பராமரித்து வந்தனர். சந்திரசேகரனின் மகன் சுதாகரன் (22) 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்.

    அடிக்கடி வீட்டில் செலவுக்கு பணம் வாங்கி சுற்றி வந்துள்ளார். இதனை அவரது பாட்டி சரஸ்வதி கண்டித்துள்ளார். இதனால் சரஸ்வதிக்கும் அவரது பேரன் சுதாகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்குமாறு தனது பேரனுக்கு சரஸ்வதி அறிவுரை கூறி வந்தார். இது சுதாகரனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

    நேற்று வழக்கம் போல் வீட்டுக்கு வந்த சுதாகரனை சரஸ்வதி சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுதாகரன் விறகு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினார். வலி தாங்க முடியாமல் சரஸ்வதி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவண்ணாரப்பேட்டையில் மதுகுடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட பாட்டியை பேரனே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை புதுகுடியிருப்பில் உள்ள வ.உ.சி. நகரை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் கவின்குமார் (19).

    கடந்த 6-ந் தேதி இரவு மதுகுடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்தார். அப்போது மகாலிங்கத்தின் தாயார் சின்னப்பொண்ணு (96) தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கவின்குமார் அவரை அடித்து கீழே தள்ளினார்.

    இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிசிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் மகாலிங்கம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனி வழக்குபதிவு செய்து கவின் குமாரை கைது செய்தார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
    ×